காதல் முதல் காமம் வரை - Sex Story PDF


Story Preview:


நான் அர்ஜுன். என் ஆசைக்காக M.B.A முடித்துவிட்டு, என் தந்தையின் வழக்கறிஞர் தொழிலுக்கு வாரிசு தேவைப்பட்டதால், B.L.ம் படித்து, இப்போது சென்னையின் மிகப்பெரிய அட்வகேட் ஒருவரிடம் உதவியாளராகப் பயிற்சிப் பெற்று வருகிறேன்.

எங்கள் ஆபீஸில் மொத்தம் 18 பேர் வேலை செய்கிறோம். அதில் 10 பேர்கள் வழக்கறிஞர்கள். 10 பேரில் 2 பேர் பார்ட்னர், ஒரு மேனேஜர் மற்றும் 7 அஸிஸ்டென்ட்ஸ்.

எங்கள் 7 பேரில் 2 பெண்கள். அதில் லாவண்யாவும் ஒருத்தி.

நானும் லாவண்யாவும் 1 வருடமாகக் காதலித்து வருகிறோம். லாவண்யாவின் அப்பா ஒரு ஆடிட்டர். பெண்ணை மிகுந்தக் கட்டுப்பாட்டுடன் வளர்த்தவர்.

லாவண்யாவின் வயது 22, உயரம் 5.5 அடி, 52 கிலோ, 34C சைஸ். தேகம் 34-28-35. கட்டுப்பட்டுடன் வளர்ந்ததால் நிறைய நற்பன்புகள் உடையவள். எப்போதும் சிரித்த முகம். முடியைக் கர்ல் செய்திருந்தாள். அங்கங்கே பர்கண்டி, கோல்ட் கலர் அடிக்கப்பட்டிருந்தது.

ஆபீஸ் மற்றும் கோர்ட்க்கு செல்லும் போது, கருப்பு அல்லது வெள்ளை கலரில் சல்வார் கம்மீஸ் மட்டுமே அணிந்திருப்பாள். மற்ற நேரங்களில் ஜீன்ஸ் டீசர்ட் அல்லது பேன்ட் சர்ட் அணிந்து வருவாள். யாரையும் மனம் கோணாமல் பார்த்துக் கொள்வாள். மிக மென்மையான குணம்.

என்னை காதலிக்கிறதாகப் பேர்தான். ஆனால் ஆரம்பத்தில் எங்கள் காதலில் கொஞ்சம் கூடக் காமம் கிடையாது. மருந்துக்குக் கூட ஒரு முத்தம் கிடையாது. அதிக பச்சம் அவள் என் கைகளைப் பிடித்துக் கொள்வாள். அவ்வளவுதான்..!!

ஆனால் அவளது நல்ல குணத்திற்காக, நானும் எதுவும் அளவுக்கதிகமாக வம்பு பன்னுவதில்லை. மாறாக அவளை உயிருக்கு உயிராக நேசிக்கவே செய்தேன்.

நான் M.B.A. படிக்கும்போது, என்னுடன் படித்த காவ்யா மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. அவளிடம் என் காதலை சொன்னபோது, அவள் ஏற்கனவே ஒருவரை லவ் பன்னுவதாகச் சொல்லி நிராகரித்து விட்டாள். அதனால் நான் எந்தப் பெண்ணிடமும் தேவையில்லாமல் பேசுவது இல்லை. பிற பெண்களும் என்னிடம் வைத்துக்கொள்வது இல்லை.

லா காலேஜில் எனக்கு லாவண்யா ஒரு வருடம் ஜீனியர். அவளைப் பார்த்திருக்கிறேன், ஆனால் பேசியது கிடையாது.

1 வருடம் முன்பு அவள் இங்கு வேலைக்கு சேர்ந்தபோதுதான் முதன் முதலாகப் பேசினேன். பின் ஒருநாள் ஒரு வழக்கில் அட்ஜர்ன்மென்ட் வங்குவதற்காக, லாவண்யாவிற்கு பயிற்சி கொடுக்க என்னிடம் எங்கள் சீப் சொல்லவும், பெட்டிசன் தயாரிக்க உதவினேன்.

அந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடப்பதால் நானும் லாவண்யாவும் என் காரில் பூந்தமல்லி சென்றோம். அன்றுதான் அவள் முதன் முதலாக கோர்டில் ஆஜர் ஆவதால் கொஞ்சம் பட படப்புடன் இருந்தாள்.

“என்ன லாவண்யா..? ஏதோ மாதிரி இருக்கீங்க..?” என்றபோது, அவள் முதல் நாள் என்பதால் நர்வஸாக இருப்பதாகச் சொன்னாள்.

நான் அவளிடம், நான் கூட இருப்பதாகவும் எதற்கும் டென்க்ஷன் ஆக வேண்டாம் என்றும் சொன்னேன். மேலும் ஒரு அட்வகேட்டாக இன்னும் சாதிக்க எவ்வளவு இருக்கு என்பதையும் பொருமையாக எடுத்துச் சொல்லி தைரியமூட்டினேன்.

கிண்டி தாண்டும்போது காரை நிறுத்தி அவளுக்கு ஜூஸ் வாங்கித் தந்தேன்.

என்னை நன்றியுடன் பார்த்து “தேங்க்ஸ்..” என்றாள்.

அன்று கோர்ட்டில் நீதிபதி, “எவ்வளவு நாள் டைம் வேனும்..?” என்றதும், லாவண்யா பதில் சொல்லத் தெரியாமல் தடுமாற, உடன் நின்ற நான் நீதிபதியிடம் அனுமதிப் பெற்று, இன்று முதல் நாள் அட்டண்ட் பன்னுவதால் பயப்படுகிறார்கள் என்று விளக்கி, 15 நாட்கள் தள்ளி தேதி வாங்கினேன்.

அதற்கு சம்மதித்து ஒத்திவைத்த நீதிபதி லாவண்யாவிடம் அவளது வெற்றிகரமான வருங்காலத்துக்கு அவரது வாழ்த்துக்களையும் தெரிவிக்க, சந்தோசத்துடன் வெளியே வந்தாள்.

பின் என்னிடம் அவளுக்கு உதவியதற்கு நன்றியைத் தெரிவித்தாள்.

நான், “தேங்க்ஸ் எல்லாம் பத்தாதுங்க, நல்ல ட்ரீட் வேனும்..!!” என்றேன்.

அன்று மாலையே தருவதாகச் சொன்னாள்.

அன்று மாலை நான், லாவண்யா மற்றும் எங்களுடன் வேலை செய்யும் ரவி 3 பேரும் பார்க் ஹோட்டலுக்குச் சென்றோம். நானும் ரவியும் வோட்கா கலந்த காக்டெயிலும், லாவண்யாவிற்கு பைனாப்பிள் ஜூஸும் ஆர்டர் செய்தோம்.

நாங்க வோட்கா ஆர்டர் செய்வதைப் பார்த்து, “அர்ஜூன் நீங்க குடிப்பீங்களா..?” என ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

நான், “ம்ம்.. ஏதாவது பார்ட்டி என்றால் குடிப்பேன். நியூ இயர்க்கு கட்டாயம் உண்டு. மற்றபடி சில சமயம் வீட்டில் என் தங்கைக் கணவருடன் நான்வெஜ் சாப்பிடும் போது குடிப்பேன்..!!” என்றேன்.

அதற்கு அவள், “ஓ காட், வீட்டிலா..? எங்கள் வீட்டில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது..!! அதுமட்டுமல்ல இப்ப ஹோட்டலில் நீங்க 2 பேரும் குடிக்கும் போது நானும் உடனிருந்தேன் என்றுத் தெரிந்தாலே அதுப் பெரிய தப்பாகிவிடும்..!!” என்றாள்.

அவள் அப்படி சொன்னதும் நான் பேரரை அழைத்து வொட்காவை கேன்சல் செய்துவிட்டு, இன்னொரு ஜீஸ் கொண்டுவரச் சொன்னேன்.

லாவண்யா என்னைக் கேள்வியுடன் பார்க்க, நான், “லாவண்யா, டின்னர் முடிஞ்சதும் நான் உங்களை உங்க வீட்டின் ட்ராப் செய்வதாகச் சொல்லி இருக்கேன். அப்பத் தவறிப் போய் உங்கள் வீட்டார் யாராவதுப் பார்த்தால் உன் பேர் கெடும். ஆனால் இப்ப யாருக்கும் பயப்பட வேண்டாம். தைரியமா உன் வீட்டுக்குள்ளேயே வந்து உன்னை விட்டு விட்டு ஒரு டம்ளர் தண்ணிக் குடிச்சுட்டுப் போகலாமே..!!” என்றேன்.

அவளும் ரவியும் எவ்வளவோ சொல்லியும் நான் அன்று குடிக்கவில்லை. அது என் மேல் லாவண்யாவிற்கு பெரிய மதிப்பை ஏற்படுத்தியதாக பின் ஒரு நாள் சொன்னாள்.

அன்று அவளை வீட்டில் விடும் போது காரிலிருந்து இறங்கியவள், வீட்டில் அவள் அப்பா இருப்பதைப் பார்த்ததும் என்னை உள்ளே வரச் சொல்லி, அவள் அப்பாவிடம் அறிமுகப் படுத்தினாள்.

அன்று கோர்ட்டில் நான் உதவியதை அவள் அப்பாவிடம் சொல்லி, மீண்டும் தன் நன்றியைத் தெரிவித்தாள்.

நான் அவள் அப்பாவிடம், “சார் நீங்க உங்கப் பெண்ணை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள். ஒரு சின்ன உதவிக்கு இதோட 20 முறை நன்றி சொல்லிட்டாங்க..!! ஆனால் இவ்வளவு சாப்ட் கேரக்டர் வச்சுக்கிட்டு க்ரிமினல் லாயரா வர முடியுமான்னு சந்தேகமா இருக்கு..!! பேசாம அவங்களுக்கு ஏதாவது கார்ப்பரேட் லா வில் பயிற்சிக் கொடுத்து லீகல் அட்வைசரா வேலைக்கு அனுப்பலாம்..!!” என்றேன்.

அவள் அப்பா அதற்கு, “நோ.. நோ.. இது என் அப்பாவின் கனவு. அவர் அந்தக் காலத்தில் பெரிய கிர்மினல் லாயர். அவரிடம் ஜுனியரா இருந்தவர் தான் உங்கள் சீப். என்னவோ எனக்கு லாவில் ஆர்வம் வரவில்லை. அதனால் என் அப்பா உயிருடன் இருந்தபோது, லாவண்யாவை வக்கீலாக்கனும்னு ஆசைப் பட்டார். அவர் ஆசைக்காகத்தான் அவளும் க்ரிமினல் ப்ராக்டீஸ் செய்கிறாள்..!!” என்றார்.

பின் நான் என் அப்பாவைப் பற்றி சொன்னதும், என் அப்பாவும் அவரும் பால்ய சினேகிதர்கள் என்றுத் தெரிவித்தார். என் அப்பாவைக் கேட்டதாகச் சொன்னார்.

அங்கிருந்து கிளம்பும் போது லாவண்யா கார் வரை வந்து மீண்டும் “தேங்க்ஸ் அர்ஜுன்..!!” என்றாள்.

“ஐயோ, இது 21 ஆவது டைம் தேங்க்ஸ் சொல்றீங்க..” என்றேன்.

அதற்கு அவள், “இந்த தேங்க்ஸ் கலையில் நீங்க செஞ்ச உதவிக்கு இல்லை. எனக்காக நீங்க குடிக்காம வந்ததுக்கு..!! நீங்க மட்டும் குடிச்சிருந்தா, நான் ஆட்டோவில் தான் வந்திருப்பேன். அல்லது பயந்துக்கிட்டு தெரு முனையில் இறங்கியிருப்பேன். இப்ப என் அப்பாவிற்கும் அறிமுகப் படுத்தியாயிற்று. நீங்கள் அவர் ப்ரன்ட்டோட பையன் என்றதும் சந்தோசமாகவும் இருக்கு..!!” என்றாள்.

அவளிடம் விடைப் பெற்று வீட்டிற்கு வந்து குளித்து விட்டு படுத்ததும், முதல் முதலாக லாவண்யாவின் நினைப்பு எனக்குள் வந்தது. மனது அவளைப் பற்றி நினப்பதில் சந்தோசப்பட்டது.

லாவண்யா போல ஒரு பெண்ணை மனைவியா அடைஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும் என நினைத்தேன்.

பின், “ச்சே..!! என்ன இது..? உடன் வேலை செய்யும் பெண் பற்றி இப்படி நினைக்கலாமா..?” என என்னைக் கடிந்துக் கொண்டேன்.

இதில் என்ன தப்பு..? காதல் தப்பில்லையெனில், அந்தக் காதல் யார் மேல் வேனும்னாலும் வரலாமே..!! ஒரு நொடியில் டக்கென்றுத் தோன்றுவதுதானே காதல்..!! இது சரியாத் தவறா..? இவரைக் காதலித்தால் பின்னால சுகமா இருக்கலாமா..? இவன் என்ன ஜாதி..? எவ்வளவு சம்பாதிக்கிறான் என்றெல்லாம் பார்த்தால், பின் அது எப்படி காதல் ஆகும்..? அது கணக்குப் பார்த்து வரும் வியாபாரம் ஆகிவிடும்..!! என நினத்தேன்.

மறுநாள் சனிக்கிழமை.

காலை10.30க்குத் தான் எல்லோரும் ஆபீஸ் வருவார்கள். சனிக்கிழமை 2 மணி வரைதான் ஆபீஸ்.

அன்று எல்லோரும் கேஸுவல் ட்ரெஸ் அணியும் நாள். நான் 10 மணிக்கெல்லாம் வெள்ளையில் டீ சர்ட்டும், ஒரு கருப்பு ஜீன்ஸும் போட்டு ஆபீஸ் சென்றேன். இன்று எப்படியும் லாவண்யாவிடம் காதலை சொல்லிவிடுவது என்று இருந்தேன்.

10.15க்கு லாவண்யா வந்தாள்.

என்ன ஆச்சர்யம்..? அன்று அவளும் வெள்ளை சர்ட், கருப்பு ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அதைப் பார்த்ததும் எனக்கு சந்தோசம் தாங்க வில்லை.

அவளிடம் சென்று, “மதியம் லன்ச்க்கு ஹோட்டல் போகலாமா..?” என்றேன்.

அவள் முகத்தில் சந்தோசம் தெரிந்த மாதிரி தோன்றியது. உடனே ஒத்துக் கொண்டாள்.

மதியம் ஹோட்டலுக்கு சென்றோம். ஹோட்டலில் ஒரு ஓரமாக இருந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன். அமர்ந்ததும் அங்கு வந்த பேரரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு லாவண்யா பக்கம் திரும்பினேன்.

“லாவண்யா நான் உங்களிடம் ஒன்று சொல்லப் போகிறேன். அதைக் கேட்டு நீங்க என்னைத் தப்பா நினைக்க வேண்டாம். சரி விசயத்துக்கு வருகிறேன். நேற்று உங்கள் வீட்டிற்கு வந்து சென்றதும் எனக்குத் தூக்கமே வரவில்லை..!! உங்களைப் பற்றிய நினைவாகவே இருந்தது. நைட் ரொம்ப நேரம் கழித்து நான் உங்களைக் காதலிப்பதாக உணர்ந்தேன். முதலில் இது தப்பு எனத் தோன்றியது. ஆனால் யோசித்துப் பார்த்தப் போது, என் காதலை தெரிவிக்காமலே சாகடிக்க மனம் வரவில்லை..!! அதுதான் உங்களிடம் ப்ரபோஸ் பன்னுவோம், நீங்க சம்திச்சால் தொடர்வோம். இல்லாவிடில் காதலை மறந்துவிட்டு நண்பர்களாக இருப்போம் என முடிவு செய்தேன்..!! இதை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் உங்கள் இஷ்டம். ஆனால் எனக்குப் பதில் மட்டும் தேவை..!!” என்றேன்.

லாவண்யா என்னை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.