சூடான காதல் சுகமான கூடல் - Sex Story PDF


Story Preview:


என்னுடைய ஆபீஸ். காலை பதினோரு மணி இருக்கும்.

நான் அந்த கட்டிட வரைபடத்தின் அளவுகளை ஸ்கேல் வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.

டேபிளில் இருந்த டெலிபோன், “கிரர்ர்ர்ர்.. கிரர்ர்ர்ர்..” என கிணுகிணுத்தது.

அருகிலிருந்த கீதா ரிசீவரை எடுத்து பேச, நான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தேன். பேசிய கீதா ரிசீவரின்வாயை மூடியபடி என்னிடம் நீட்டினாள்.

“உனக்குத்தான்..!!” என்றாள்.

“யாரு..?”

“மீனலோசனி..!!”

என் இதயத்துடிப்பு பட்டென்று எகிற ஆரம்பித்தது. ஆபீஸ்நம்பருக்கேகால் செய்ய ஆரம்பித்து விட்டாளா..? இப்போது என்ன செய்வது..? நான் ஒரு இரண்டு வினாடிதான் யோசித்திருப்பேன்.

“நான் இல்லைன்னு சொல்லி வச்சிரு..!!” என்றேன்.

கீதா என்னை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்தாள். பின்பு மெதுவாக ரிசீவரை தன் காதுக்கு கொண்டு சென்றாள். ஒரு வினாடி காதில் வைத்திருந்தவள் திரும்ப ரிசீவரை அதனிடத்தில் வைத்தாள்.

“என்னாச்சு..?” நான் புரியாமல் கேட்டேன்.

“அவங்களே கட் பண்ணிட்டாங்க..!!” சொல்லிவிட்டு கீதா அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

எனக்கு மனதில் எதுவோ உறுத்தியது. மனசு இப்போது மிகவும் பாரமாக இருந்தது.

ஏன் இப்படி எல்லாம் செய்கிறேன்..? எதற்காக இந்த திருட்டுத்தனம்..? நான் செய்வது சரியா..? தவறா..? மனதில் எழும்பிய கேள்விகள் என்னை குழப்பமடையச் செய்தன.

நான் மனம் ஒன்றாமலே மறுபடியும் என் பார்வையை வரைபடத்தின் மேல் வீசினேன்.

மீனு என்கிற மீனலோசனியை பற்றி தெரிந்து கொள்ளும் முன் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

என் பெயர் அசோக். டிப்ளமோ சிவில் படித்திருக்கிறேன். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் ட்ராப்ட்ஸ்மேனாக வேலை பார்க்கிறேன். சொந்த ஊர் சேலத்துக்கு பக்கம். கிண்டியில் ஒரு வாடகை வீட்டில் மகேஷ், ரவி, கண்ணன் எனும் இன்னும் மூன்று நண்பர்களோடு வசிக்கிறேன்.

சென்னைக்கு வரும் முன்னர் அவர்கள் எனக்கு பழக்கமில்லை. சென்னை வந்த புதிதில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்பு நாங்களே தனியாக வீடு எடுத்து தங்கி எங்கள் நட்பை நீட்டித்துக் கொண்டோம். நான்தான் சின்ன கம்பெனியில் சின்ன வேலையில் இருக்கிறேன். அவர்கள் மூவரும் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். கன்னாபின்னாவென்று சம்பாதிக்கிறார்கள்.

இந்த மீனு அதே கம்பெனியில் அவர்களை விட அதிக சம்பளம் வாங்குகிறாள். மாதமானால் சுளையாக ஐம்பதாயிரத்துக்கு மேல் பார்க்கிறாள்.

என் நண்பர்களுடன் சேர்ந்து எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். எங்களுடன் கேரம் விளையாடுவாள். டிவி பார்ப்பாள். சினிமாவுக்கு வருவாள். சிரிப்பாள். சண்டை போடுவாள். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் பேசுவாள். கோபம் வந்தால், அழகாக கண்களை உருட்டி முறைப்பாள். இப்போது கொஞ்ச நாளாக என்னை காதலிக்க ஆரம்பித்து இருக்கிறாள்.

அவள் வாய்விட்டு என்னிடம், “ஐ லவ் யூ..!!” சொல்லாவிட்டாலும் என்னால் யூகிக்க முடிந்திருந்தது.

நான் கொஞ்ச நாளாக அவளை அவாய்ட் பண்ணுவதற்கும் அதுதான் காரணம். அவளை பிடிக்காதா என்று கேட்கிறீர்களா..? இந்த உலகத்திலேயே அவளைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பின்பு ஏன் அவாய்ட் பண்ணுகிறேன் என்று கேட்கிறீர்களா..? தொடர்ந்து படியுங்கள்.